பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானது!

232 0

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்று கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இன்றைய பாராளுமன்ற அமர்வினையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் புறக்கணிக்கனித்துள்ளனர்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினரும் பாராளுமன்ற அமர்வை புறக்கணித்து உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எனவே, இன்றைய பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் வாக்குகள் மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது

Leave a comment