யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

249 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது வருட மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த இரண்டாவது வருட மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் நான்காவது வருட மாணவர்களால் இரண்டாவது வருட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை காயங்களுக்குள்ளான மாணவர்களால் தாக்கிய குறித்த மாணவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment