பிரதமர் பதவிக்கான இடைக்காலத் தடை உத்தரவு 2019 வரை நீடிப்பு

239 0

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதிவி உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி உள்ளிட்ட அமைச்சரவை சட்ட விரோதமானது என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 122 எம்.பி கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் 16, 17, 18ஆம் திகதிகளில் குறித்த மனு தொடர்பான விசாரணைகளை மீண்டும் மேற்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment