பிரதேச சபை உறுப்பினரை கொலை செய்த பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

294 0

ஹக்மன பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ஹக்மன, கெம்பிலியாபொல பகுதியில் வைத்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவத்திற்கு கட்ட​ளை வழங்கி குற்றத்திற்காக பெண் ஒருவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment