வீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு

463 0

முல்லைத்தீவு – குமுளமுனை, செங்காட்டுக்கேணி வீதி புனரமைப்பு வேலைகளின் போது வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட குறித் வீதி பலகாலமாக, பலத்த சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் குமுளமுனை வட்டார பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர், கரைதுறைப்பற்று பிரதேசசபையில் முன்வைத்த பிரேரணைக்கமைய குறித்த வீதி தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்றைய நாள் புனரமைப்பு வேலைகள் நடைபெறும் நிலையில் வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருளை பிரதேசசபை உறுப்பினர் கவாஸ்கர் அருகிலுள்ள இராணுவத்தினருக்கு தெரிவித்ததையடுத்து அவர்களிடம் குறித்த வெடிபொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a comment