சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்களை நீக்க நடவடிக்கை

191 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது சுதந்திர கட்சியின் அதிகாரங்கள் சில இடங்களில் கைமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment