ஐக்கிய தேசிய கட்சியின் பேரணி ஒத்திவைப்பு

376 0

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

குறித்த பேரணி எதிர்வரும் 13ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அது பிற்போடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்தமைத் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 13ஆம் திகதி வழங்கப்படவுள்ளதால் அதன் பின்னர் குறித்த பேரணியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பேரணியானது எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

Leave a comment