ரணில் விக்ரமசிங்கவுக்கான பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்காது- அஜித்

287 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்க மாட்டாது என ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

களுத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கினாலும் இந்த விடயத்தில் வழங்காது என எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமக்கு 113 பேரை விடவும் கூடுதலானவர்களின் ஆதரவு உள்ளது எனவும், அதனை நிரூபிக்க முடியும் எனவும் அஜித் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment