தப்பிச் சென்ற இருவரை தேடும் பொலிஸார்

267 0

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக உடுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உடுகம, கொத்தலாவல வீதியில் இரவு வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்களில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது வௌிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment