ஹெரோயினுடன் இருவர் கைது

269 0

அங்குலான பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (07) மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கந்தானை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 603 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment