மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

274 0
ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடத்தவ, கலேயாய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மேலும் நால்வருடன் வேட்டைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தோட்டத்தை சுற்றி பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலி ஒன்றில் இருந்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்த நபர் ஹசலக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பமுணுகம, உடவத்த பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment