தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு

268 0

மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயில் எரிந்த குறித்த நபர் படு காயங்களுடன் திக்ஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment