பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு சம்பவம்

234 0

பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 277 கோடி ரூபா பெறுமதியான பெருந் தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2778 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment