தந்தையை கொலை செய்த மகன்

374 0

தொடங்கொட, கிவுலவத்தை பிரதேசத்தில் தந்தையை தடியால் தாக்கி மகன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 05.00 மணியளவில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிவுலவத்தை, குளுகஹகொட பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தந்தையை கொலை செய்த மகன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment