நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

489 0
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்தில் நேவி சம்பத் 10வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.