விக்னேஸ்வரன் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும் – மஹிந்த

268 0

cvw-vs-mrவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு என்ற போர்வையில் நாடு பிரிக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இது போன்ற கருத்துக்களை தென்மாகாண முதலமைச்சரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ வெளியிட்டிருந்தால் இனவாத கருத்துக்களை முன்வைப்பதாக தெரிவித்து மறுநாள் ரகசிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
ஆனால் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக இதுவரை எந்தவித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.