விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிப்பு

312 0

fishermen-arrested-600x381வில்பத்து தேசிய சரணாலயத்தில் வைத்து இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று அனுராதப்புரம் சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்;ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இராணுவத்தின் கஜபா படைப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.