வடக்கு முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது!

304 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கமைய இன்று மதியம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனுராதபுரச் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்த நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கிணங்க, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த 21 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று மதியம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.