யாழ்ப்பாணத்தில் நீர் சுத்திகரிப்புக் கருவியை மைத்திரி திறந்து வைக்கவுள்ளார்

280 0

173948797janaaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் பாரிய நீர் சுத்திகரிப்புக் கருவியை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளார்.

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்யவுள்ள மைத்திரிபால சிறிசேன குறித்த நீர் சுத்திகரிப்புக் கருவியையும் திறந்துவைக்கவுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் போதுமான நீர் சுத்திகரிப்புக் கருவி இல்லாத காரணத்தினால் தாம் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறி பல்லைக்கழக மாணவர்கள் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த நீர்சுத்திகரிப்புக் கருவியை அமைப்பதற்கு ஜனாதிபதிச் செயலகம் பணிப்புரை விடுத்ததையடுத்து கடற்படையினரால் இக்கருவி தற்போது நிறுவப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.