நீரில் மூழ்கி மாணவன் பலி

336 0

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பாகை பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரன் கம்பளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என்றும் இவரது சடலத்தை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கொண்ட குழுவொன்றே இவ்வாறு நீராடச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment