ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போன்று ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்கமுடியாதென்றும், பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய உறுப்பினர் ஒருவர் என ஜனாதிபதி கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

