சிஐடியினரின் உத்தரவை புறக்கணித்தார் முப்படைகளின் பிரதானி

463 0

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன சிஐடியினர் முன்னிலையில் ஆஜராகதவறியுள்ளார்

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் நபரிற்கு அடைக்கலம் அளித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் முப்படைகளி;ன் பிரதானிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே ரவீந்திர விஜயகுணவர்த்தன இன்று ஆஜராக தவறியுள்ளார்.கடந்த செப்டம்பர் மாதம் சிஐடியினர் விசாரணைக்காக அழைத்தவேளை அதனை புறக்கணி;த்து முப்படைகளின் பிரதானி மெக்சிக்கோ சென்றிருந்தமை  குறிப்பிடத்தக்கது

Leave a comment