எரிபொருள் நிலைய ஊழியர் போதைப்பொருளுடன் கைது

15129 0

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடமிருந்து போதைப்பொருளை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புனராக பணியாற்றும் ஒருவரை திடீர் பரிசோதனை செய்த பொலிஸார் அவரிடம் இருந்து சிறிய அளவில் ஹெரோயின் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கடமையில் இருந்த மேலும் சிலரையும் சோதனைக்குட்படுத்திய பொலிஸார் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.