கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு!

232 0

தெரிவுக் குழுவின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். 

எனினும் ஐக்கிய தேசிய கட்சி 7 பேரை தெரிவுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பரிந்துரை தொடர்பில் கடுமையான முரண்பாட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்றைய தினம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment