கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்.தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.