பெரும்பான்மையை நிரூபித்தால் வெளியேறுவோம்- காமினி லொக்குகே

253 0

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது தமக்குப் பிரச்சினைக்குரிய ஒன்று அல்லவெனவும், தமக்குப் பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தவுடன் தாம் அரசாங்கத்தைக் கையளிக்கத் தயாராகவுள்ளதாகவும் அரசாங்க தரப்பு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

தாம் ரணில் விக்ரமசிங்க போன்று அரசாங்கத்தை இழந்த பின்னரும் செல்ல மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. எமது அரசாங்கத்தில் நாம் ரணிலுக்கு அலரிமாளிகையை அளித்திருக்கின்றோம். ஏனெனில், அவர் எம்முடன் இருந்த சிரேஷ்ட உறுப்பினர். அவருக்கு போதும் என்று கருதுகின்ற போது அதிலிருந்து அவர் வெளியேறட்டும் எனவும் அவர் கூறினார்.

Leave a comment