கார்த்திகை 27ல் அரசியல் பேச்சிற்கு இடமில்லை.!

336 0

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலு மில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அம்பாறை மாவட் டத்தில் பெயர் போன கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லங்களில் முன் னேற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக அதன் பணிக்குழுவின ரின் கலந்துரையாடல் நேற்று 20 திருக்கோவில் 01 வாகீஸ்டர் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமலாக் கப்பட்டோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அப்பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

மேலும் இது தொடர்பான கூறுகையில்… கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமானது ஒரு பெயர் போன துயிலுமில் லமாகும் காரணம் எண்ணூறுக்கு மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் இத் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன.

Leave a comment