ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றுமொரு கலந்துரையாடல்-மனோ

263 0

ஐக்கிய தேசிய முன்னணியின் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (21) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசிய முன்னணியினர் பல முறை கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் நேற்று (20) மாலை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் எதிர்பால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று ஐக்கிய தேசிய முன்னணியினர் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

Leave a comment