போதை மாத்திரைகளுடன் மூவர் பொலிஸாரினால் கைது

267 0

மினுவாங்கொட பகுதியில் 4000 ட்ரமடோல் வகையான போதை மாத்திரைகளுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 மற்றும் 40 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொட மற்றும் கந்தானை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் 12 இலட்சம் ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment