தேர்வுக்குழுவிற்கான உறுப்பினர்கள் இன்று நியமிப்பு

215 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விஷேட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நேற்று பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தேர்வுக்குழுவினை நியமிப்பது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தேர்வுக்குழுவிற்கான ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெயர் இன்று (20) குறிப்பிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a comment