மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கிடையாது- ராஜித

214 0

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாதென ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ராஜித சேனாரத்ன எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

ஜனாதிபதிக்குரிய வரவு செலவுகளை தீர்மானிப்பது பாராளுமன்றம் ஆகும். இருப்பினும், ஜனாதிபதிக்கு  3 மாதங்களுக்கு நாட்டின் செலவுகளை கொண்டு செல்ல தேவையான நிதியை பெற்றுக் கொள்ள அதிகாரம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தையும் இல்லாமல் செய்ய பாராளுமன்றத்தினால் முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment