மஹிந்த யாருடைய கயிற்றை விழுங்கியுள்ளார்? – குமார வெல்கம

246 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி வந்து மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டவர்களே அவரை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியவர்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளியேறி வந்தவர்களும் அவருடன் இருந்த சிலரும் இணைந்தே மஹிந்த ராஜபக்ஷவை தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைக்குள் தள்ளியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய  இதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். இன்றைய அரசியல் நிலைமையை அவதானிக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ யாரோ ஒருவருடைய கயிற்றை விழுங்கியுள்ளதாக நினைக்கிறீர்களா? என அவரிடம் கேட்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இருந்த மிகவும் பிரபல்யமான அரசியல்வாதி மஹிந்த ராஜபக்ஷ ஆகும். மைத்திரிக்கோ, ரணிலுக்கோ அவருடைய பிரபல்யத்துடன் நெருங்கவும் முடிவில்லை. உண்மையில் அவரைத் தவிர தேசிய தலைமைத்துவத்துக்கு ஒருவரைத் தேடிக்கூடப் பார்க்க முடியாது.

இதனால், அவரின் பிரபல்யத்தை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கைதான் அவரை இந்த அரசியல் நெருக்கடிக்குள் விழச் செய்துள்ளது எனவும் குமார வெல்கம எம்.பி. மேலும் கூறியுள்ளார்.

Leave a comment