முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மத் நடுநிலையாக செயற்பட்டார்- பந்துல

279 0

தமது அரசியல் வரலாற்றில் இந்தளவுக்கு மோசமாக நடந்துகொண்ட சபாநாயகர் ஒருவரை தற்பொழுதே பார்த்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ் சாட்டினார்.

இரண்டு தினங்களும் அரசியலமைப்புக்கு முரணான வகையிலேயே சபாநாயகர் நடந்துகொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அப்போதிருந்த சபாநாயகர் எம்.எச்.மொஹமட் நடுநிலையாகச் செயற்பட்டார்.

ஆனால் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குரலை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கை யில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார். மரண உதவி சங்கங்களின் தலைவரை நீக்குவதற்குக் கூட இப்படி குரலை அடிப்படையாகக் கொண்டு வாக்கெடுப்பு நடத்துவதில்லையெனவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற கூட்டு பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment