வடிவேல் சுரேஷ் மீண்டும் மஹிந்த தரப்புக்கு? – சொய்ஷா தெரிவிப்பு

416 0

ஐக்கிய தேசிய முன்னணிக்கு நேற்று (14) ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று (15) மீண்டும் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடும்போது அவர் அரசாங்க தரப்பு ஆசனத்தில் அமரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடிவேல் சுரேஷ் ஐ.தே.கட்சியில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியவர். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அறிவித்தவுடன் அவருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து அமைச்சுப் பதவியொன்றையும் வடிவேல் சுரேஷ் பொறுப்பேற்றார்.

Leave a comment