பெண்களை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளையடித்தமுன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

26397 0

முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான  குறித்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

பல பெண்களுடன் நெருங்கிப் பழகி ஆலயங்கள் உட்பட பல வழிபாட்டுத் தலங்களிற்கு அழைத்துச் சென்று பரிகார பூஜைகள் செய்விப்பதை வழக்கமாக கொண்டிருந்த குறித்த நபர், அப் பெண்களை மயக்கி அவர்களிடமுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துவந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது நீர்கொழும்பு பகுதியில் தனியார் நகை கடை ஒன்றில் இருந்து குறித்த நபர் விற்கப்பட்ட 3 தங்க சங்கிலிகளும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல பெண்கள் இவரது வலையில் சிக்கி இருக்கலாம் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment