நாம் தேர்தல்களுக்குப் பயந்தவர்கள் அல்ல – ஹர்ஷ டி சில்வா

240 0

ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு அமைவாக இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விளக்கம் கோரும் வகையில் உயர்நீதிமன்றத்தினை நாடவுள்ளோம். நாம் எப்போதும் தேர்தல்களுக்குப் பயந்தவர்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஆனால் எதுவாயினும் அரசியலமைப்பின் பிரகாரமே இடம்பெற வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு எனும் நாட்டின் முழுப்பெயரில் இருந்து ஜனநாயகம் என்ற சொல்லினை நீக்கும் வகையிலான செயற்பாடுகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்த்து வெற்றி கொள்வோம் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment