இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியில் சடலம் மீட்பு(காணொளி)

505 0

rakkuwana-body

இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கரன்கெட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடைய சடலம் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் எமது செய்திப் பிரிவிற்கு கூறினர்.

 
சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் காணால்போன பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிற்கு பின்புறத்திலுள்ள காட்டு பகுதியொன்றிலிருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இறக்குவானை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.