மேலும் இது வரையான அகழ்வு பணிகளின் போது  கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது என்பதுடன் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரியவரும்.

கடந்த வாரத்தில் சந்தேகத்திற்கு உரிய விதமாக சில தடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மோதிரம் போன்ற ஒரு தடையப் பொருளும் மாபிளை ஒத்த ஒரு தடையப் பொருளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதே வகையில் குறித்த மனித புதை குழியில் இருந்து கிடைக்கப் பெற்ற முக்கிய தடைய பொருளான மெலிபன் பக்கற் தொடர்பான அறிக்கையானது நீதி மன்றத்துக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு அவ் அறிக்கை தொடர்பான விபரங்கள் தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.