கையெழுத்திட்டது ரணிலுக்கு ஆதரவாக அல்ல- விமல்

250 0

ஐக்கிய தேசியக் கட்சியினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கே கையெழுத்திட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்லவெனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மலர் வீதியிலுள்ள பிரதமர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எது எப்படிப் போனாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தெளிவாகவே அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

தனது பறிபோகப் போகும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடகமாடுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment