புத்தளம் – சிலாபம் பகுதியில் மாலை நேர தனியார் வகுப்பை நடத்திவந்த ஆசிரியர் ஒருவர் தரம் 6 மாணவி ஒருவருக்கு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மாணவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக குருநால் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் சந்தேகநபர் சிலாபம் மஜிஸ்த்திராட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் மேலும் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

