புதிய அரசாங்கத்தின் பலத்தை திங்கள் காண்பிப்போம் – மஹிந்த

234 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணைந்துள்ள புதிய அரசாங்கத்திற்கான மக்கள் பலத்தை எதிர்வரும் திங்கட் கிழமை காண்பிப்போம் எனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள ஆதரவாளர்களை ஒன்றிணைத்து பாராளுமன்றத்திற்கு முன்னதாக நடத்த தீர்மானித்துள்ள மக்கள் பேரணியின் மூலம் அதனை நிரூபித்துக் காட்டுவோம் எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கும் ஒத்தி வைப்பதற்குமான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது. சிங்கள மொழி மூலமான அரசியலமைப்பில் இது தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.தே.கவினர் இது தொடர்பாக வெளிநாட்டு பிரஜைகளையும் சந்தித்து கலந்துரையாடுகின்றனர். ஆங்கில மொழி மூலமான அரசியலமைப்பை வாசித்து காட்டுகின்றனர். இவற்றை விடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையையே இவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றார்.

Leave a comment