ஹெரோயின் மற்றும் கொகெய்ன் போதைப் பொருளுடன் யுவதி ஒருவர் கைது

24577 0

ஹெரோயின் மற்றும் கொகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த யுவதி ஒருவர் மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியிடமிருந்து 100 கிராமும் 970 மில்லிகிராம் நிறையுடை ஹெரோயினும் 15 கிராமும் 830 மில்லிகிராம் நிறையுடைய கொகெய்னும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment