எந்த அரசாங்கம் வந்தாலும் தனக்கு அமைச்சுப் பதவி- எஸ்.பீ. நாவின்ன

270 0

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தனக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைக்கப்பெறுவதாகவும் இதனால், ஆட்சி மாற்றம் குறித்து தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. நாவின்ன தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தான் தீர்மானம் ஒன்றுக்கு வருமுன்னர் தனது கட்சிக் காரர்கள் அனைவரையும் கலந்துரையாடியதாகவும் அவர்கள் தனக்கு எந்தவொரு தீர்மானத்துக்கும் வருவதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment