அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள்

368 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-4அரச நிறுவனங்களில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து முறைப்பாடு செய்பய்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் சிலவற்றில் இடம்பெற்ற பாரியளவிலான மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…இவ்வாறான பல முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடுகள் எந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாது.எந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது என்பதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டியதில்லை.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் முறைப்பாடு கிடைக்கப்பெறும் அரச நிறுவனங்களின் மோசடி குறித்து விசாரணை நடத்தப்படும்.இந்த மோசடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.