கலேவல, பஹலவெல பகுதியில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.