பொறுத்திருக்க முடியாமையினாலே அரசாங்கத்தை அமைத்தோம் – விஜேதாச

4561 0

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார் எனத் தெரிவித்த கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத் திட்டத்தினைத் தோற்கடித்து, புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கலாம்.

ஆனால் அதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படும். அதுவரை பொறுத்திருந்தால் நாடு மோசமான நிலையை அடையும் என்பதாலேயே உடனடியாக புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

புதிய அமைச்சரவையின் கீழ் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் முதலாவதாக இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment