அர்ஜுன ரணதுங்க STF சீருடையில்

223 0

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்குள் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.

இன்று பிற்பகல்வேளையில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்குள் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து அவர் வெளியே வர முடியாமல் இருந்துள்ளார்.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சருக்கு STF சீருடை அணிவித்து, தலைக்கவசம் அணிவித்து அவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பதற்ற நிலைமை காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment