பேஸ்புக் மூலம் களியாட்டம்! போதைப்பொருட்களுடன் 58 பேர் கைது

191 0

முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் போதைபொருள் வைத்திருந்தமை என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் உட்பட 58 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

குறித்த கைது சம்பவம் ஹப்புத்தளை, விஹாரகல எனும் பகுதியில்  வாடகைக்கு வீடு ஒன்றைப்பெற்று குறித்த களியாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹெரோயின், கஞ்சா, போதை மாத்திரை, மதுபானம் மற்றும் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்கள் பதுளை, இரத்தினபுரி, பசறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment