ஊழல், நிதி மோசடிகள் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கை தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில்!

197 0

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

 

மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் என்பன கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கைகள் மீதான விவாதம் நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதில் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதை அடுத்து தமிழ், ஆங்கில மொழிகளின் பிரதிகள் வழங்கபட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கோரிக்கை விடுத்ததை அடுத்து விவாதம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment