முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதை குமார வெல்கம கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளையும் விமர்சித்து வரும் வெல்கம தான் மகிந்த ராஜபக்சவை மாத்திரம் ஆதரிப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
வெல்கம பிரிந்து செல்வார் என நான் நினைக்கவில்லை அவர் இது பற்றி என்னிடம் பேசவில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குமார வெல்கம தெரிவித்துவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளிற்காக அவரை எச்சரிக்க வேண்டுமா என நிருபர் ஒருவரின் கேள்விக்கு அதற்கான அவசியமில்லை, அவர் ஒரு சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவரிற்கு விசேட ஆலோசனைகள் தேவையில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
என்னை பொறுத்தவரை வெல்கம தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.